Thursday 3 March 2011

மனத்துளிகள்

மூடுகின்ற பனிக்கும் எனக்கும்
இடையே தொட்டு போகிறது சோலை காற்று
மழை விழுந்து படி இருக்க,
எப்படியே செல்லமாய் - வந்து
மோதுகின்றது மெல்லிய சாரல்,
தாழ்பால் விலகுகின்ற நொடியில்
உள்ளே வரலாம் - என
கதவடியில் காத்திருந்தது
எட்டி பார்க்கிறது வெய்யில்,
நான் பூச்சுடுவது இல்லை,
இருந்த போதும் - எனக்கு
பூச்சூடி விடுகின்றன மரங்கள்
தங்கள் பூக்களை உதிர்த்து,
மெல்லிய இரவில்,
சாந்தமான தோற்றத்துடன்
அருகில் வந்து அமர்கின்றது என் நிழல்,,
மௌனமாய் இருக்கும் போது,
மழை கசிந்த இரவில்
மனதின் ஓரத்தில் மௌனம் பேசிக்கொண்டிருக்கும்,
மின்சாரம் விடுமுறை எடுக்கும் போது,
இருளில் மடியில் மின் மீனி பூச்சிகள்
மெல்லா சிரிக்கும்
என் கண் இமைக்கும் - இவ்வாறு
ஒவ்வொரு நாளும் விட்டு செல்கின்றன,
என் மனத்துளிகளை!

No comments:

Post a Comment