Thursday 3 March 2011

திருவிளையாடல்



ஏழை தான் நான் _ ஆனால்
என் வீட்டினில் ஆயிரம் விளக்கின் ஒளி
எப்படித் தெரியுமா?- அத்தனையும் ஓட்டைகள்
என் வீட்டு கூரையில் சூரிய நமஸ்காரத்துக்கு
நான் வாயிற்படி தாண்டியதில்லை
உச்சி வேளையில் உணவு வேகவைக்க
வெப்பமூட்டுவதில்லை - ஏன்னென்றால்
வெந்துபோய் இருக்குது, வறட்சியால் என் வீடு.
இரவில் என் வீட்டினுள் நிலாசோறு
மார்கழிப் பூவெல்லாம் மலர்கின்றது என்
வீட்டில் மழைக்காலமென்றால்
மழலைக்கு கொண்டாட்டம்
எனக்கோ நீரோட்ட போராட்டம்!
ஒழுகும் நீரைப் பிடிக்க ஒட்டை சட்டி
அடுப்பங்கரைக்குள் ஆறு வெள்ளம்
நித்திரைக்கு வழியில்லை, நிம்மதிக்கு துணையில்லை
இயற்கைக்குக்கூட இத்திருவிளையாடல்
நடத்த இடமே இல்லையா......?
என் வீட்டை தானே எட்டிப் பார்க்கிறது.......

No comments:

Post a Comment