Thursday 3 March 2011


வறுமையின் வளமை

ஓலைக்குடிசை
வளைந்து நிற்கிறது

ஓட்டைகளோடு
வயி்ற்று சோறு
ஒருவேளை
அதுவும் சிலவேளை
எப்போதாவது
விளக்கின் வெளிச்சம்
விதியில் தெரியும்!
வறுமை வளமாக வாழ்கின்றது
இங்கே!
மழைத்துளிகள் வெளியில் இருந்து
உள்ளே செல்ல
கண்ணிர் துளி உள்ளே இருந்து
வெளியே வந்து போகின்றது!
இந்த பூமி மேட்டின்
மேல் வறுமையின்
பாட்டு கேட்டுக்கொண்டே
இருகின்றது
ஆண்டாண்டுகாலமாக!

No comments:

Post a Comment